யார் யாருக்கு எந்தெந்த தொகுதி - பேச்சு துவக்கியது தி.மு.க.
சென்னை:
தமிழகத்தில் ஆளும் தி.மு.க. தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகிக்கும்கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம்காணும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இது குறித்து தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிசெய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய தமிழகத்துக்கு 10 தொகுதிகள்ஒதுக்கப்பட்டிருந்தது.
இவற்றில் அவர்கள் போட்டியிட வேண்டிய 8 தொகுதிகள் அடையாளம்காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 தொகுதிகள் வெள்ளிக்கிழமை அடையாளம்காணப்படும்.
பேச்சுவார்த்தை முடிந்து வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசுவாமிநிருபர்களிடம் கூறுகையிைல் ,நாங்கள் போட்டியிடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதொகுதிகள் எங்களுக்கு திருப்தி அளிக்கின்றன என்றார்.
புதிய தமிழகத்துக்கு தொகுதிகள் அடையாளம் பணி குறித்த கூட்டம் சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த கூட்டத்தில் தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன், தேர்தல் பணிக்குழு தலைவர்ஆற்காடு வீராசாமி, சென்னை நகர மேயர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களை இன்டர்வியூசெய்யும் பணி இந்த மாதம் 29-ம் தேதி முடிவடைந்து விடும்.
பாண்டிச்சேரியில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்தவர்களை இன்டர்வியூ செயுயம்பணி இந்த மாதம் 30-ம் தேதி துவங்கும் என வியாழக்கிழமை இரவு தி.மு.க.வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications