அ.தி.மு.கவில் இணைந்தார் தி.மு.க. பேச்சாளர்
சென்னை:
தி.மு.கவின் பிரபல பேச்சாளரான, மதுரை தீப்பொறி ஆறுமுகம். வியாழக்கிழமைமாலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அவர் முன்னிலையில்அ.தி.மு.கவில் இணைந்தார்.
தீப்பொறி ஆறுமுகத்தின் மகன் முருகேசனும் அ.தி.மு.கவில் இணைந்தார்.எந்த அணியில் இருக்கிறார் வன்னிய அடிகளார் ?
இந்நிலையில் நான் பா.ம.கவை ஆதரிக்கவில்லை என் வன்னிய அடிகளார்கூறியுள்ளார்.
அவர் சமீபத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அந்தக் கூட்டணியில் இடம்பெறுவார் எனக் கருதப்பட்ட நிலையில் அவர் திடீரென ராமதாசை சந்தித்துப்பேசினார். இதனால் அவர் அதிமுக அணிக்குத் தாவி விட்டதாக செய்திகள் வந்தன.
ஆனால், இதை மறுத்து வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், நான் புதன்கிழமை பா.ம.க. தலைவர் ராமதாசை சந்தித்துபேசினேன். மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்டால் ஆதரிப்பீர்களா என்றுகேட்டேன். அதற்கு அவர் பரிசீலனை செய்கிறேன் என சொன்னார்.
நான் தொடர்ந்து வாழப்பாடி தலைமையிலான வன்னியர் சங்கத்தில்தான் நீடிக்கிறேன்என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications