பைபிள், குரான் எரிப்பு: ஆந்திரா, பஞ்சாபில் பதட்டம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவாலா டவுனில் உள்ள சர்ச்சில் நடந்து கொண்டிருந்த பிரார்த்தனைக்கூட்டத்தில் புகுந்த 16 பேர் கொண்ட கும்பல் ஒன்று பைபிளின் ஒரு பக்கத்தை எரித்தது.

பைபிள் எரிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், செவாலா டவுன் டவுன் சர்ச்சில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டம்நடந்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று புகுந்து பைபிள் மேல் தீ வைத்தது. மேலும்சில பைபிள் பக்கங்களை கிழித்தெறிந்தது.

அங்கு ரோந்துப் போலீசார் வருவதைப் பார்த்த அக்கும்பல் அங்கிருந்து உடனடியாகத் தப்பித்தது. இதையடுத்துஅங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் விரைந்தார்:

சம்பவம் கேள்விப்பட்டதும் மாநில காவல்துறை அமைச்சர் தேவேந்தர் கவுடா சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

அங்கு வன்முறைச் சம்பவம் எதுவும் ஏற்படவில்லை. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்வர் கண்டனம்:

முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தேசிய ஒருமைப்பாட்டைசீர்குலைக்கும் வகையில் யாரோ இச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

குரான் பக்கங்கள் எரிப்பு?

பஞ்சாப் மாநிலம் அமிர்ஸ்தாரில் இந்து சுரக்ஷ சமிதியைச் சேர்ந்தவர்கள், மசூதியில் குரானின் பக்கங்களைபுதன்கிழமை எரித்தனர் என்றும் கூறப்படுகிறது.

அதே போல் பட்டியாலாவிலும் வியாழக்கிழமை குரான் எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதை போலீசார்மறுத்துள்ளனர்.

போலீசார் கூறுகையில், சில சமூக விரோதிகள் பாடப்புத்தகங்களைத்தான் எரித்துள்ளனர். மதப்புத்தகங்கள்எதையும் எரிக்கவில்லை. இருந்தாலும் சிலரைக் கைது செய்துள்ளோம் என்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+