வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை வந்தன
Subscribe to Oneindia Tamil
கோவை:
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுநடத்த இயந்திரங்கள் கோவை வந்து சேர்ந்தன.
கோவை மாவட்டத்திற்குட்பட்ட 15 சட்டசபைத் தொகுதிகளில் இந்த ஆண்டுமுதல் மின்னணு இயந்திர ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. இதற்கான செயல் விளக்கம், அதிகாரிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த ஓட்டு இயந்திரங்கள் வியாழக்கிழமை பெங்களூரிலிருந்து லாரிகள் மூலம் கோவை வந்துசேர்ந்தன. 6 லாரிகளில் கொண்டு வரப்பட்ட இந்த இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு கலெக்டர் அலுவலகவளாகத்தில் பாதுகாப்புடன் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள 15 சட்டசபைத் தொகுதிகளில் 2 ஆயிரத்து 760 மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் பயன் படுத்தப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications