புலிகளின் சண்டை நிறுத்தம் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து புலிகள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நாங்கள் டிசம்பர் மாதம் 24 ம் தேதி சண்டை நிறுத்தம் அறிவித்தோம். அது இரண்டு முறைநீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை நீட்டிக்கப்பட்ட சண்டைநிறுத்தம் மார்ச் 24 ம் தேதி சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சண்டை நிறுத்தத்தை மீண்டும் ஒருமாதத்திற்கு நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அதாவது ஏப்ரல் 24 ம் தேதி வரை சண்டைநிறுத்தம் அமலில் இருக்கும். இலங்கையில் அமைதி ஏற்படுத்த நார்வே அதிக அளவு முயற்சி மேற்கொண்டுவருகிறது.

இரு தரப்பினரையும் அழைத்து நார்வே தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். நாங்கள் அமைதி ஏற்படுத்தும் வகையில், சண்டைநிறுத்தம்கடைபிடித்து வரும் இந்நேரத்தில் இலங்கை அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை வீரர்கள், கடற்படை வீரர்கள் அனைவரும்தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த முறை அரசு, எங்களது சண்டை நிறுத்த நீட்டிப்புக்குச் சாதகமான முறையில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கை அரசு அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்என்று கூறியுள்ளனர்.

முன்னதாக, இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக்சோல்ஹெம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார்.

கடந்த 18 வருடமாக தனி ஈழம் கேட்டுப் போராடி வருகிறார்கள் புலிகள். இந்தப் போராட்டத்தில் இதுவரை 64,000 பேர் உயிரிழந்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+