திருப்பூரில் கோஷ்டி மோதல்: இருவர் கொலை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

திருப்பூரில் நடந்த கோஷ்டி மோதலில் இரண்டு பேர் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில்தொடர்புடைய 7 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் வடக்குப் பகுதியில் எம்.எஸ் நகரில் மார்ச் 22ம் தேதி நள்ளிரவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்தமோதலில் மதுரையைச் சேர்ந்த 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது.

கத்தியால் குத்துப்பட்ட சுதாகர் (28), சேகர் (22) ஆகிய இருவரும் இறந்தனர். மேலும் முருகன் (25) என்பவர்காயமடைந்தார். இவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையிலிருந்து சேகர் மற்றும் அவரது அண்ணன் குமார் ஆகியோர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது குமாருக்கும் மற்றொருமொரு கோஷ்டிக்கும் இடையே வாய்த்தகராறுஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குமார், தனது தம்பி சேகரிடம் புகார் கூறியுள்ளார். சேகர், சுதாகர் மற்றும் முருகன் உள்பட நான்குபேரை அழைத்துக் கொண்டு அந்தக் கோஷ்டியினைத் தேடிச் சென்றது. ஏற்கனவே அந்த கோஷ்டி செல்வவிநாயகர் கோயில் அருகே உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

சேகர் மற்றும் அவரது நண்பர்கள் துரை என்பவரிடம் சென்று தனது அண்ணனுடன் நடந்த புகார் குறித்துவிசாரித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது.

இந்த சண்டையில் சுதாகர், சேகர், முருகன் ஆகியோருக்குக் கத்திக் குத்து விழுந்தது. இதில் இருவர் இறந்தனர்.முருகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+