For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளுடன் எங்களுக்குத் தொடர்பில்லை: ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

விடுதலைப் புலிகளுடன் எங்களுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனதலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

காங்கிரசும், தமிழ் மாநில காங்கிரசும் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. கூட்டணியில் நீங்களும் இருப்பதால் விடுதலைபுலிகள் ஆதரவு குறித்த உங்கள் நிலைப்பாடில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட நிருபர்களின் பலகேள்விக்களுககு பதிலளித்து ராமதாஸ் கூறியதாவது:

எங்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. நான் இது வரை விடுதைலப்புலிகள் தலைவர் பிரபாகரணை பார்த்ததும் கிடையாது.

விடுதலைப் புலிகள் தமிழகத்தில் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடக்கூடாது என்ற எங்கள் நிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. வேறு சில தீய சக்திகளுடன் சேர்ந்து சட்டம் ஒழுங்குபிரச்சனையை ஏற்படுத்தும். போலீசார் நியாயமான, நேர்மையான தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீய சக்திகள் எவை என்பது குறித்து பா.ம,க. கட்சி பிரதிநிதிகள் முதல்வர் கருணாநிதியிடமும், ஆளுனர் பாத்திமாபீவியிடமு, பிரதமர் வாஜ்பாயிடமும், உள்துறை அமைச்சர் அத்வானியிடமும் சென்ற ஆண்டு நவம்பர் மாதமேகொடுத்துவிட்டனர்.

கட்சி பிரதிநிதிகள் தலைமை தேர்தல் ஆணையர் கில் சென்னை வரும் போது அவரை சந்தித்து இது குறித்து புதியஅறிக்கை ஒன்றை கொடுக்கவிருக்கிறார்கள்.

பாண்டிச்சேரியில் என்னை கொலை செய்ய முயன்றது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்தனர். அவர்கள்இப்போது தி.மு.கவில் உள்ளனர். இதே சம்பவத்தில் தொடர்புடைய ரவி என்பவரை இன்னும் கைதுசெய்யவில்லை.

ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும். மேலும் ஆயுத பேரஊழலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 27 தொகுதிகள் குறித்த பட்டியலை அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவிடம்கொடுத்து விட்டோம். மதசார்பற்ற கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் விவாதித்த பின் இன்னும் இரண்டொருநாட்களில் எங்களுக்கான தொகுதிகள் முடிவு செய்யப்படும் என்றார்.

த.மா.கா மூத்த தலைவர்கள் பேட்டி:

சிதம்பரம் உயிர்தான் இங்கு உள்ளது. உடல் இன்னும் சத்திய மூர்த்தி பவனில் இருப்பதாக கூறியது குறித்துத.மா.கா. தலைவர்களில் ஒருவரான பாலசுப்ரமணியமும் வேறு சில தலைவர்களும் கூறுகையில் சிதம்பரத்தின் உயிர்பா.ஜ.க. உடலுடன் ஏற்கனவே கலந்து விட்டது.

எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் உயிர் என்பது கட்சி தொண்டர்களிடம் தான் இருக்க வேண்டும்.சிதம்பரத்தை கட்சியிலிருந்து நீக்குவது என்ற முடிவப 55 மாவட்ட உறுப்பினர்களின் சம்மதம் பெற்ற பிறகு தான்எடுக்கப்பட்டது என்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X