ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு
டெல்லி:
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது பித்தநீர்ப்பையில் உள்ள கற்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும் என்றும், அதுவரை அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும்மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அயர்லாந்து மற்றும் கிரிஸ் செல்லத் திட்டமிட்டிருந்த அவர் தனது சுற்றுப்பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவேதிட்டமிட்டிருந்த படி அவரால் அயர்லாந்து மற்றும் கிரிஸ் நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி எப்போது வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது அயர்லாந்து, கிரிஸ் நாடுகளுடன் கலந்தாலோசித்து விட்டு பின்னர்அறிவிக்கப்படும்.
மேலும் ஸ்லோவேனியன் அதிபர் ஏப்ரல் 2 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று ஏற்கனவேஅறிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
ராஷ்டிரபதிபவன் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் (80) அடுத்த இரண்டு நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு பித்தநீர்ப்பையில்கற்கள் உருவாகியுள்ளது. அவர் அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதனால் அடுத்த இரண்டு நாட்களில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை ஜெய்ப்பூர் செல்லவிருந்தநிகழ்ச்சியும், புதன்கிழமை ஹைதராபாத் செல்லவிருந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.