ஆயுத பேர ஊழல்: நீதிபதி வெங்கடசுவாமி விசாரிப்பார்
டெல்லி:
தெஹல்கா டாட் காம் இன்டர் நெட் தளத்தால் கூறப்பட்ட ஆயுத பேர ஊழல் குறித்துவிசாரணை செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடசுவாமி தலைமையில்ஒரு நபர் விசாரமை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழல் குறித்த விசாரிக்க இப்போது பணியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிதலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என வாஜ்பாய் கூறியிருந்தார்.
ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் இதை ஏற்க மறுத்து விட்டார்.பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்
அமைக்க முடியாது என்று கூறி விட்டார். ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டுதான்விசாரணை செய்ய முடியும் என கூறினார்.
அதன்படி தற்போது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடசுவாமி தலைமையில்ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. வெங்கடசுவாமி சென்றஆண்டுதான் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.
இந்த ஒரு நபர் கமிஷன் டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும்.விசாரணை அறிக்கையை 4 மாதத்திற்குள் அரசிடம் சமர்ப்பிக்கும்












Click it and Unblock the Notifications