புலிகள் தலைவர் பிரபாகரன் குழந்தைகள் பாஸ்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகனும், மகளும் பள்ளி இறுதித் தேர்தவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று விட்டதாக தி சண்டேஅப்சர்வர் என்ற பத்திரிக்கையில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி விவரம்:
கிளநொச்சி மாவட்டம் ராமநாதபுரம் தேர்வு மையத்தில் பிரபாகரனின் மகள் துவாரகாவும், மகன் சார்லஸ் அந்தோணியும் கடந்த டிசம்பர் மாதம்பரிட்சை எழுதினார்கள்.
இருவரும் ஆங்கிலப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பிற பாடங்களில் மிக அதிக அளவு மதிப்பெண்கள் பெற்று, முதல் வகுப்பில் தேறியுள்ளனர்என்று கிளிநொச்சி மாவட்ட கல்வி மையம் தெரிவிக்கிறது.
இருப்பினும், துவாரகாவும், சார்லசும் முறையாகத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்களா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் பிரபாகரனின் குழந்தைகள் இருவரும் மறைவான காட்டுப்பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதியதால், அவர்களைக் கண்காணித்தமேற்பார்வையாளர்கள் சரியாக கவனித்தார்களா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் பிரபாகரன் தனது இரு குழந்தைகளையும் மேற்படிப்புக்காக வெளிநாடு அனுப்பி படிக்க வைக்கத் தீர்மானித்திருக்கிறார் என்றும்கூறப்படுகிறது.
இவ்வாறு அந்தப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
யு.என்.ஐ.