For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைத்துத் துறையிலும் ஊழல்: விட்டல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அனைத்துத் துறையிலும் ஊழல் பரவிக் கிடக்கிறது என்று மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்புத்துறை ஆணையர்விட்டல் தெரிவித்தார்.

டெல்லியில் விட்டல் அளித்த பேட்டி:

இந்தியாவில் அனைத்துத் துறையிலும் ஊழல் பரவிக் கிடக்கிறது. ஊழல் இல்லாத இடம் என்று ஒரு இடத்தைக் கூடப் பார்க்க முடியாது.எல்லாவற்றிலும் பணம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், தேர்தலில் நிற்கும் போது பணத்தை வாரி இறைத்துத்தான் பிரசாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு எப்படிப் பணம்கிடைக்கிறது என்று பார்த்தால் அதற்குப் பின்னால் ஊழல் நிச்சயம் இருக்கும்.

பாதுகாப்புத்துறை மட்டுமின்றி கிரிக்கெட் வரை ஊழல் பரவி உள்ளது என்பதற்கு சமீபத்திய உதாரணங்களே சாட்சியம். ஒரு ஒப்பந்தம்கையெழுத்தாவதற்காகப் பணம் கைமாறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்திய மக்களிடம் உள்ள பணத்தில் 40 சதவீதம் கருப்புப்பணமே. தற்போது மத்திய அரசை கிலி அடைய வைத்துள்ளனர் தெஹல்கா டாட் காம் இணைய தளநிருபர்கள்.

மார்ச் 13 ம் தேதி இவர்கள் ஆயுதப் பேர ஊழலை அம்பலப்படுத்தி ஜார்ஜ் பெர்னான்டஸ் முதல் பலரை ராஜினாமா செய்ய வைத்து விட்டனர். இதுகுறித்துநாங்கள் விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்பிப்போம் என்றார் விட்டல்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X