For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணப்பன் கட்சி போட்டியிடும் தொகுதிகள் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து தி.மு.க தலைமையுடன்,ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேச்சுவார்த்தை நடத்தினார். மக்கள் தமிழ் தேசத்திற்கான தொகுதிகள்எவை என்பதும் முடிவாகி விட்டது.

தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எந்தத்தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து வைகோ, அண்ணா அறிவாலயம் சென்று, தி.மு.க. தலைவர்கருணாநிதியுடன் திங்கள்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரவு 8.30 மணிக்கு அறிவாலயம் வந்த வைகோ சுமார் 20 நிமிடங்கள் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சென்றார்.

அவருக்கு முன்பாக மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பன் வந்து சென்றார். பேச்சுவார்த்தைகளின்போது கட்சி பொதுச் செயலாளர், அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும் உடன் இருந்தார்.

பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்குஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து கருணாநிதியுடன் பேசினேன். எங்கள் கருத்தைத் தெரிவித்தோம்,அவர்களது கருத்தை அவர்கள் கூறினார்கள். தொடர்ந்து பேசுவோம் என்றார்.

கண்ணப்பன் கூறுகையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து, தொகுதிகள் முடிவாகிவிட்டது. அவை எவை என்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவிப்பார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X