தொகுதிகள்: மூப்பனார்- இளங்கோவன் ஆலோசனை
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் 15 தொகுதிகள் எவை என்பது குறித்து தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாருடன், மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மற்றும் முன்னாள் தலைவர்தங்கபாலு ஆகியோர் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு, தமிழ் மாநில காங்கிரஸ்மூலமாக 15 தொகுதிகள் கிடைத்துள்ளன. இந்த இரு கட்சிகளுக்கும் சேர்த்து அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா 47 தொகுதிகளைக் கொடுத்துள்ளார்.
தங்களுக்கு ஒதுக்கப்படும் 15 தொகுதிகள் எவை என்பது குறித்து ஏற்கனவே ஒருமுறை மூப்பனாருடன்,இளங்கோவனும், தங்கபாலுவும் பேசியுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை இருவரும் மூப்பனாரைச்சந்தித்துப் பேசினர்.
பேச்சுவார்த்தை முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் கூறுகையில், தொகுதிகள் எவைஎங்களுக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்து மூப்பனாருடன் பேசினோம். பேச்சுவார்த்தை சமூகமாக இருந்தது.விரைவில் இது குறித்து முடிவாகும் என்றனர்.