For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களை ஏமாற்றும் ஜாதிக் கட்சிகள்: விஜயகாந்த் வருத்தம்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

சுய லாபத்துக்காகவும், மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காகவும் சிலர் ஜாதியை கையில் எடுத்துக்கொண்டுள்ளனர் என்று நடிகர் விஜயகாந்த் கூறினார்.

காஞ்சிபுரத்தில் விஜயகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு நடிகர் விஜயகாந்த் பேசியதாவது:

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டால் அரசியலில் குதிக்கப் போகிறார் என்று கூறுகிறார்கள்.மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் இதுபோன்ற விழாக்களை நடத்துகிறேன்.

மக்களில் ஆண் ஜாதி, பெண் ஜாதி, ஏழை ஜாதி என்றுதான் உள்ளது. ஆனால் சிலர் ஓட்டுக்காக மக்களைஏமாற்றுகின்றனர்.

நான் யாருக்கும் விரோதியாக செயல்பட மாட்டேன். ஜாதி பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுவது எனக்குப்பிடிக்காத ஒன்று.

தேர்தலில் ஓட்டுப் போடாதவர்களின் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் போன்றவைகளை பறிமுதல் செய்ய அரசுஉத்தரவிட வேண்டும்.

தன்மான உணர்வுக்காக மன்றக்கொடியை அறிமுகப்படுத்தினேன். இதை யாரும் சீண்டிப்பார்க்க வேண்டாம். சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்றார் விஜயகாந்த்.

கோபத்தில் மாலையைத் தூக்கி எறிந்த விஜயகாந்த்:

அரசியல் கட்சிகளைப் போல் மிகவும் ஆடம்பரமாக விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், விழாவில்கலந்து கொள்ள விஜயகாந்த் வந்ததும், அவருக்கு மாலையிட, ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டுசென்றது.

விஜயகாந்துக்கு மாலை போடவும், அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ளவும் ரசிகர்கள் கூட்டம்அலைமோதியது. ரசிகர்கள் விஜயகாந்த் அமர்ந்திருந்த மேடையிலும் ஏறி விட்டனர். இதையடுத்து மன்றநிர்வாகிகளும், போலீசாரும் ரசிகர்களைப் பிடித்து தள்ளினர்.

இதற்குப்பின், விஜயகாந்த் தன் கழுத்திலிருந்து மாலைகளையெல்லாம் கோபத்தில் தூக்கி எறிந்தார். பின்னர்ரசிகர்களையெல்லாம் மேடையிலிருந்து போலீசார் இறக்கியபின்தான் விஜயகாந்த் அமைதியானார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X