For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவும் பணி தோல்வி

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா:

இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை செலுத்தும் பணி தோல்வியடைந்தது.

ராக்கெட் செலுத்தப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3.47மணிக்கு அதை ஏவும் பணி கைவிடப்பட்டது.

ராக்கெட்டை தரையிலிருந்து விண்ணுக்கு உயர்த்த உதவும் சிறிய ரக ஸ்ட்ராப் ஆன் மோட்டர்ஸ் முழுமையாகஅளவு இயங்கவில்லை. இதனால், ராக்கெட்டுக்கு தேவையான அளவு உந்து சக்தி ராக்கெட்டுக்கு கிடைக்கவில்லை.

இதனால் ராக்கெட் ஏவுவதை நிறுத்திவிட விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இரவு 7.47 வரை ராக்கெட்டைஏவுவதற்கு நேரம் உள்ளது. இதனால், மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்க்கவும் வாய்ப்புள்ளது.

49 மீட்டர் உயரமும் 401 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. 1,540 கிலோ எடையுள்ள செயற்கைக் கோளைவிண்ணில் 36,000 கி.மீ. உயரத்தில் செலுத்த இருந்தது.

ராக்கெட்டுக்கான கவுண்ட் டெளன் துவங்கி 56 மணி நேரம் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால்,ராக்கெட் கிளம்ப ஒரு வினாடி இருந்த நிலையில் பிரச்சனை ஏற்பட்டது.

ராக்கெட்டை தரையிலிருந்து கிளப்ப உதவும் ஸ்ட்ராப் ஆன் மோட்டர்ஸ் எனப்படும் சிறிய ராக்கெட்டுகள் சரியாகசெயல்படவில்லை. அவை உரிய திறனை உற்பத்தி செய்யவில்லை. இதனால், ராக்கெட்டை செலுத்துவதுஉடனடியாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து அங்கு கூடியிருந்த விஞ்ஞானிகளின் முகங்களில் சோகம் பூசிக் கொண்டது. மிக ஆர்வத்துடன்கட்டுப்பாட்டு அறையில் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த இந்திய விண்வெளித்துறை தலைவர் டாக்டர்கஸ்தூரிரங்கன் கவலைதோயந்த முகத்துடன் விஞ்ஞானிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X