Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை, ஈரோடு பகுதிகளில் தொடர்கொள்ளை: பீதியில் மக்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை, ஈரோடு மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்து வரும் தொடர் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள்அச்சமடைந்துள்ளனர்.

கோவை அருகே உள்ளது அவிநாசி. இங்கு எல்.ஐ.சி அதிகாரி ராசப்பன் என்பவர் குடியிருந்து வருகிறார்.புதன்கிழமை இரவு இவரும், இவரது மனைவி மற்றும் இரண்டு பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் இவர்களது வீட்டிற்கு 6 வாலிபர்கள் கொண்ட கும்பல் ஒன்று வந்தது. இந்த கும்பல் பாறாங்கல்லைத்தூக்கிப் போட்டு அவரது வீட்டுக் கதவை உடைத்தது. இந்த சத்தம் கேட்ட ராசப்பன், அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் 25 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர்கள் அவரை மிரட்டத் தொடங்கினர். அப்போது அவர்கள் சத்தம்போட முயன்ற போது அவர்களை உருட்டுக் கட்டையால் தாக்கினர். பின்னர் அவரது மனைவி மற்றும் அங்கிருந்த3 பெண்கள் அணிந்திருந்த நகைகளை பிடுங்கிக் கொண்டு தலைமறைவாயினர்.

3 பெண்களும் பறிகொடுத்த நகையின் மதிப்பு ஒரு லட்சமாகும். கொள்ளையர்கள் தாக்குதலில் காயம் அடைந்தராசப்பன், அவரது மனைவி சரஸ்வதி மற்றும் சாந்தி, காந்திமதி ஆகியோர் ஈரோட்டில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே பல்லடம் அருகே ஒரு கும்பல், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு கொள்ளையடித்துச் சென்றது. ஈரோட்டில்இதே போன்ற கொள்ளை நடந்துள்ளது. இந்த நிலையில் கோவை ஈரோடு பகுதிகளில் அதிகரித்து வரும்கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+