டெல்லி-லண்டன் புதிய விமான சேவை
லண்டன்:
லண்டனில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சர்வீசை 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவக்கி உள்ளது யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினால் பிரிட்டிஸ் ஏர்வேஸ் மற்றும் ஏர்-இந்தியா நிறுவனங்கள்மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சர்வீஸ் நடத்த அனுமதிக்கப்பட்டு வந்தது.
இருநாடுகளுக்கு இடையேயான நேரடி சர்வீஸின் தேவை அதிகரித்து வருவதால் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாகயுனைடெட் சர்வீஸ் நிறுவனம் தனது நேரடி விமான சர்வீஸை மீண்டும் துவக்கி உள்ளது.
இதற்கான துவக்க விழா வியாழக்கிழமை லண்டனில் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்து பேசிய இங்கிலாந்திற்கான இந்திய ஹைகமிஷனர் ஹர்தீப் புரி,
இருநாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சர்வீஸின் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இரண்டரை லட்சம் விசாக்களை இந்தியஹைகமிஷன் அளித்து உள்ளது.
ஆண்டுக்கு 20% என்ற அளவில் அதிகரித்து வரும் விசாக்களின் எண்ணிக்கை விரைவில் ஆண்டிற்கு 5 லட்சம் என்ற நிலையை எட்டும்.
ஆனால் அதற்கு ஏற்ற அளவில் விமான சர்வீஸ் இல்லை. தற்போது அளிக்கப்படும் விமான சர்வீஸ் 25% முதல் 35% தேவைகளை மட்டுமே நிறைவுசெய்கிறது. இதனால், பயணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.
லண்டன்-டெல்லி இடையே தினசரி விமான சர்வீஸிற்கு போயிங் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் அறிவித்து உள்ளது. மற்றஏர்லைனஸ் நிறுவனங்களும் விரைவில் நேரடி விமான சர்வீஸை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்