அறுவை சிகிச்சை: ஜனாதிபதி நாளை வீடு திரும்புகிறார்
டெல்லி:
பித்தப்பையில் (கால் பிளாடர்) கற்கள் உருவாகியிருந்ததால் அவற்றை நீக்குவதற்காக அறுவை சிகிச்சைமேற்கொண்ட ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் உடல் நலம் தேறி வருகிறார். அவர் சனிக்கிழமை வீடு திரும்புவார்என்று கங்காராம் மருத்துவமனை செய்திகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, கங்காராம் மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் அவர் நடந்தார். அவர் மிகவும்மகிழ்ச்சியாகக் காணப்படுகிறார். காலை உணவு சாப்பிட்டார் என்றனர்.
முன்னதாக, பித்தப்பையில் கற்கள் இருந்ததால் (கால் பிளாடர்) கங்கா ராம் மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன்சேர்க்கப்பட்டார் ஜனாதிபதி. அவருக்கு வியாழக்கிழமை டாக்டர் பிரதீப் தலைமையிலான டாக்டர்கள் குழு அறுவைசிகிச்சை செய்தது.
பார்வையாளர்கள் யாரும் ஜனாதிபதியைப் பார்க்கக் கூடாது என்று டாக்டர்கள் கூறியிருப்பதால் அவர்ஓய்வெடுத்து வரும் அறையில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
துணை ஜனாதிபதி நலம் விசாரித்தார்:
துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் தொலைபேசி மூலம் கே.ஆர்.நாராயணனின் உடல்நிலை குறித்து விசாரித்துத்தெரிந்து கொண்டார். பிரதமர் வாஜ்பாய், நாராயணன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு பூச்செண்டுஅனுப்பியிருந்தார்.
யு.என்.ஐ.