For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே நாளில் 2 நுழைவுத் தேர்வுகள் : குழப்பத்தில் மாணவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாட்டில் ஒரே நாளில் இரண்டு நுழைவுத் தேர்வுகள் நடக்கவுள்ளதால் எந்தத் தேர்வை எழுதுவது என்றகுழப்பத்தில் உள்ளனர் ப்ளஸ் டூ மாணவர்கள்.

மே மாதம் 13 ம் தேதி அகில இந்திய மருத்துவ பல் மருத்துவ நுழைவுத் தேர்வு நடக்கவுள்ளது.

காஷ்மீர், ஆந்திரா தவிர நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்கள் இந்தநுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படும்.

இதற்கிடையே, சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகம், எம்.எஸ்.சி. இன்பர்மேஷன் டெக்னாலஜி,எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகளை இந்த வருடம் முதல்நடத்தவுள்ளது.

இதில் ப்ளஸ் டூ தேறிய மாணவ, மாணவியர் நேரடியாகச் சேரலாம். இதற்கான நுழைவுத்தேர்வும் 13ம் தேதிநடைபெறுகிறது.

இதனால் எந்தத் தேர்வை எழுதுவது என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டுதேர்வுகளில் ஏதாவது ஒன்றை வேறு தேதிக்கு மாற்றி வைப்பது நல்லது என மாணவர்களும், பெற்றோர்களும்நினைக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X