For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷார்ஜா கிரிக்கெட்: இந்தியாவுக்கு பதிலாக நியூசிலாந்து

By Staff
Google Oneindia Tamil News

ஹாமில்டன்:

அடுத்த மாதம் ஷார்ஜாவில் நடக்கவிருக்கும் கோகோ- கோலா கிரிக்கெட் போட்டியில்இந்தியாவுக்கு பதிலாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி பங்கேற்கவிருக்கிறது.

ஷார்ஜாவில் 3 நாடுகள் பங்கேற்கும் கோகோ-கோலா ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள்அடுத்த மாதம் 8ம் தேதி துவங்குகிறது.

இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகளும் விளையாடஇருந்தன. ஆனால் இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணிக்குமத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனால் இந்த போட்டியிலிருந்துஇந்தியா விலகிக் கொண்டது.

தற்போது ஷார்ஜா போட்டியில் இந்தியாவுக்கு பதிலாக நியூசிலாந்து அணிபங்கேற்கவுள்ளது.

இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரி கிறிஸ்டோபர் டாய்க்தெரிவிக்கையில், ஷார்ஜா போடியில் கலந்து கொள்வதில்லை என இந்தியா முடிவுசெய்ததையடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்ளுமாறு எங்களுக்கு அழைப்புவந்தது.

இதை ஏற்று கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

நியூசிலாந்து அணியின் மூத்த வீரர்கள் நீண்ட காலமாக தொடர்ந்து விளையாடிவருவதால் அவர்கள் சோர்வடைந்துள்ளனர். அவர்களுக்கு ஒய்வு தேவை.

எனவே இந்த போட்டியில் இளம் வீர்கள் பலரும் கலந்து கொள்வார்கள். இதுநியூசிலாந்து அணியின் இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்த எங்களுக்குகிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பாகும் என்றார்.

ஷார்ஜா போட்டி தனியாரால் நடத்தப்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் சர்வதேசகிரிக்கெட் கவுன்சில் தலையிட முடியாது என சர்வதேச கிரிக்ெ
நியூசிலாந்து அணி ஷார்ஜா போட்டியில் கலந்து கொள்வது அந் நாட்டிற்கும் இலங்கை,பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையேயான நட்புறவை மேலும் பலப்படுத்தும் எனவும்கருதப்படுகிறது.

ஷார்ஜா போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியும், பாகிஸ்தான் அணியும் இந்தகோடைகாலத்தில் நியூசிலாந்து சென்று விளையாடவிருக்கின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X