தமிழ்க்குடிமகனுக்கு தி.மு.க. வில் சீட் இல்லை
சென்னை:
இந்து அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகனுக்கு தேர்தலில் தி.மு. க. வில் சீட் கிடைக்காது என்றுகூறப்படுகிறது.
அதற்குப் பதிலாக ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவிக்கு இணையான பதவி வழங்கப்படலாம் என்றும்தெரிகிறது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளையாங்குடி தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்தமிழ்க்குடிமகன். முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர். தற்போதைய ஆட்சியில்அமைச்சராக இருக்கிறார். மதுரையைச் சேர்ந்த, முன்னாள் பேராசிரியர்.
தற்போது மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் தமிழ்க்குடிமகனுக்கு சீட் கிடைக்குமா என்றகேள்வி எழுந்துள்ளது. அவரகுக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுப்பதில்லை எனவும், அவரது தொகுதியானஇளையாங்குடியை மக்கள் தமிழ் தேசம் தலைவர் கண்ணப்பனுக்குக் கொடுக்கவும் தி.மு.க. தலைமைதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தனக்கு சீட் மறுக்கப்பட்டதாகக் கேள்விப்பட்ட தமிழ்க்குடிமகன் வியாழக்கிழமை அவசரம், அவசரமாகஇளையாங்குடிக்குக் கிளம்பிச் சென்றார். அங்குள்ள தனது அலுவலகத்தில் வைத்து ஆதரவாளர்களுடன்ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தனியாக நின்று போட்டியிடுமாறும், அதிக ஆதரவுடன் வெற்றி பெற முடியும் என்று அவரதுஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், உடனடியாக கிளம்பி சென்னைக்கு வருமாறு தமிழ்க்குடிமகனுக்குதகவல் வந்தது.
இதையடுத்து தனது ஆதரவாளர்கள் புடை சூழ சென்னை கிளம்பிச் சென்றார் தமிழ்க்குடிமகன். அங்கு கட்சித்தலைமை சார்பில் பேசியவர்கள், அமைச்சர் பதவிக்கு இணையான பதவி தரப்படும் என்று சமாதானம்கூறப்பட்டது. இதை அவர் ஏற்றுக் கொண்டாரா என்று தெரியவில்லை.
இதற்கிடையே, தமிழ்க்குடிமகனுக்கு மீண்டும் இளையாங்குடியே தர வேண்டும் என்று கோரி அவரதுஆதரவாளர்கள் கட்சித் தலைமைக்கு நூற்றுக்கணக்கான தந்திகளை அனுப்பினர்.