வைகோ வெளியே போகலாம்: கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
தி.மு.க. கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று ம.தி.மு.க. நினைத்தால் அவர்கள் தாராளமாகவெளியேறலாம் என்று முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை கூறினார்.
இதுகுறித்து சென்னையில் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ம.தி.மு.க, தி.மு.க கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று தீர்மானித்தால் அவர்கள் வெளியேறலாம்.ம.தி.மு.க. வுக்கு 21 தொகுதிகள் கொடுத்துள்ளோம். இதற்கு மேல் கொடுக்க முடியாது.
நாங்கள் கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டோம் என்று அவர்கள் பொய் கூறி வருகிறார்கள்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 21 தொகுதிகளை தி.மு.ககொடுத்துள்ளது. அதில் 12 தொகுதிகள் மட்டும் தான் நாங்கள் விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த தொகுதிகள் என்றுகூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 43 தொகுதிகள் தேவை என்று ம.தி.மு.கவினர் பட்டியல் கொடுத்தார்கள்.அவர்கள் கொடுத்த 43 தொகுதிகளிலிருந்துதான் நாங்கள் 21 தொகுதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்குஒதுக்கினோம் என்றார் கருணாநிதி.
ஏற்கனவே, தி.மு.க.வோடு தொகுதிப் பங்கீடு குறித்து மோதி வரும் வைகோவின் மதிமுக கருணாநிதியின்அறிவிப்பால் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இரு கட்சிகளுக்கும் சட்டசபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வதில் ஆரம்பித்த தகராறு தொகுதிகளைஒதுக்குவதிலும் தொடர்ந்தது. இப்போது பிரச்சனை முற்றி வருகிறது.
உதவாத தொகுதிகளை எங்கள் தலையில் கட்டுவதா என்று ம.தி.மு.க.தொண்டர்கள் கருணாநிதியை கண்டித்துஇரண்டு தினங்களுக்கு முன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான தமிழக ராஜீவ் காங்கிரஸ், காமாட்சி நாயுடுதலைமையிலான தெலுங்கர் முன்னேற்றக் கழகம், சரத் யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியகட்சிகள் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டன என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications