For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏப்ரலில் வாஜ்பாய் ஈரான் செல்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பிரதமர் வாஜ்பாய், வரும் ஏப்ரல் மாதம் 10 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஈரான்செல்கிறார்.

1993 ம் ஆண்டுக்குப்பிறகு ஈரான் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் இவரே.

பிரதமரின் ஈரான் பயணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

ஈரான் செல்லும் வாஜ்பாய், சர்வதேச தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது உள்பட பல்வேறு சர்வதேசவிஷயங்கள் குறித்து ஈரான் பிரமருடன் ஆலோசனை நடத்துவார்.

பொருளாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும்இரு நாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஈரானில் இருந்து இயற்கை வாயுவை இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்தும் இரு நாடுகளும் ஆலோசனைசெய்து வருகின்றன.

இது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்தியாவும், ஈரானும் இதுகுறித்து ஆலோசனைசெய்வதற்காக இரு நாட்டுப் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.

அவர்கள், ஈரானிலிருந்து ஆழ்கடலில் குழாய்கள் அமைத்து இந்தியாவுக்கு எரிவாயுவைக் கொண்டு வரலாமாஅல்லது பூமிக்கு அடியில் குழாய்கள் அமைத்து தரைமார்க்கமாக பாகிஸ்தான் வழியாகக் கொண்டு வரலாமாஎன்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறார்கள் என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X