For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று இறுதி முடிவு...வைகோ அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்குமா என்பது குறித்து சனிக்கிழமை அறிவிக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோகூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை திருநெல்வேலியில் நிருபர்களிடம் பேசிய வைகோ, திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவைவெளியேற்ற கருணாநிதி முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக வெள்ளிக்கிழமை இரவு நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, திமுகவிற்கும் மதிமுகவிற்கும் இடையேஉறவு முறிந்து விட்டதாக அறிவித்தார்.

30 சீட்கள் கொடுக்கும் அளவிற்கு மதிமுக பெரிய கட்சி அல்ல. தொகுதி பங்கீடு தொடர்பாக அறிக்கைப் போர் தொடர்ந்த மதிமுகவுடனான திமுகவின்உறவு முறிந்தது என அறிவித்தார்.

திருநெல்வேலியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு மதுரை வந்த வைகோவிடம் நிருபர்கள் இது பற்றி தெரிவித்து அவரின் கருத்தை கேட்டனர். அப்போதுவைகோ தெரிவித்த தகவல்கள்:

தேசிய ஜனநாயக முன்னணியில் மதிமுக தொடர்ந்து இருப்பதா இல்லையா என்பது குறித்து சனிக்கிழமை சென்னையில் கட்சி உறுப்பினர்களுடன் விவாதித்துஇறுதி முடிவு அறிவிக்கப்படும்.

மதிமுகவை வெளியேற்ற திமுக தலைமை முடிவு செய்து மதிமுகவின் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வந்தது. மதிமுக கோரிய தொகுதிகளைஒதுக்குவதாக கூறிவிட்டு பின்னர் அவர்கள் இஷ்டம் போல் தொகுதிகளை ஒதுக்கி உள்ளனர் என குற்றம் சாட்டினார்.

இதனிடையே, மதுரையை சேர்ந்த மதிமுக உறுப்பினர்கள் வைகோ எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மதிமுக கட்சியை ஆரம்பித்த போது, மதுரை திமுகவில் இருந்து பிரிந்து வைகோவின் கரத்தை வலுப்படுத்த மதிமுகவில் இணைந்தவர்கள் இந்த மதுரைஉடன்பிறப்புகள்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X