அமைச்சர் செங்குட்டுவனுக்கு கூடுதல் பொறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தி.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்த தமிழ்குடிமனின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் வகித்து வந்த பதவிகள் வேறு இரு அமைச்சர்களுக்கு கூடுதல்பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க.அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை மற்றும் தமிழ் ஆட்சி மொழி தமிழ்பண்பாட்டு துறை அமைச்சராக இருந்து வந்தவர் தமிழ்குடி மகன். இவர் கடந்தசட்டமன்ற தேர்தலில் இளையான்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டுவெற்றி பெற்றவர்.

வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் இளையான்குடி தொகுதி கூட்ணி கட்சிகளில்ஒன்றான தமிழ்தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்குடிமகன் தி.மு.க. அமைச்சர் பதவி, தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவிஆகியவற்றை ராஜினாமா செய்து விட்டு ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில்இணைந்தார்.

இவரது ராஜினாவை தமிழக ஆளுனர்பாத்திமா பீவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்துதமிழ் குடிமகன் வகித்து வந்த தமிழ் ஆட்சிமொழி தமிழ் பண்பாட்டு துறை, அமைச்சர்தா.கிருட்டிணனிடம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் வகித்துவரும் நெடுஞ்சாலைத்துறையுடன் இதையும் கூடுதல்பொறுப்பாக அவர் கவனிப்பார்.

இந்து அறநிலையத்துறை புலவர் செங்குட்டுவனுக்கு கூடுதல் பொறுப்பாககொடுக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது கவனித்து வரும் கால்நடை பராமரிப்பு துறைபொறுப்புடன் இதையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.

இது குறித்த உத்தரவை ஆளுனர் பாத்திமா பீவி பிறப்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+