டான்சி வழக்கு: தீர்ப்பை நிறுத்தி வைக்க ஜெ. மனு
சென்னை:
டான்சி நிலபேர ஊழல் வழக்கில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திங்கள்கிழமை அவர் தாக்கல் செய்த மனுவில், வருகின்ற சட்டபேரவை தேர்தலில் போட்டியிட இருப்பதால், டான்சி வழக்கில் எனக்கு தண்டனைஅளிக்கும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதுவரை 4 வழக்குகளில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. டான்சி நிலபேர ஊழல் வழக்கை தவிர மற்ற வழக்குகளில்அதிகபட்சமாக 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
டான்சி வழக்கில் மட்டும் இருவேறு குற்றங்களுக்காக 3 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்கஉத்தரவிடப்பட்டது.
இரண்டாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால் தண்டணையை ரத்து செய்யக் கோருகிறார் ஜெயலலிதா.
தீர்ப்பு ரத்து செய்யப்பட்டால் மட்டுமே ஜெயலலிதா எந்தப் பிரச்சனையும் இன்றி தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications