For Daily Alerts
Just In
கோவையில் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா
கோவை:
கோவை பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவைப் புதூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது புகழ் பெற்ற பட்டீஸ்வரர் கோயில். இந்தக் கோவிலின் மூலவர்பட்டீஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவபெருமான்.
ஒவ்வொரு வருடமும் இந்த கோவிலின் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தவருடமும் தேர் திருவிழா வழக்கம் போல் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்ததேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பட்டீஸ்வரரின் அருள் பெற்றனர்.
இந்த தேர் திருவிழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ரங்கசாமி அடிகள் பங்கேற்றார். கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தானம் உள்ளிட்ட பல அதிகாரிகளும் தேர் திருவிழாவில் பங்கேற்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, April 5, 2001, 5:30 [IST]