நண்பரை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு:
சமையல் செய்யும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரைக் குத்தி கொலை செய்த சக நண்பர்கள் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒரத்த நாடு சாயகுடியைச் சேர்ந்த 3 பேர் ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் சாயப்பட்டறை ஒன்றில்வேலைபார்த்து வந்தனர். இதில் தர்மராஜ், செல்லதுரை, பாஸ்கரன், நாகராஜன் ஆகியோர் கருங்கல்பாளையத்தில்தங்கியிருந்தனர்.
இவர்களுக்கு நாகராஜன் சமையல் செய்து வந்துள்ளார். இவரது சமையல் பிடிக்காததால் இவர்களுக்குள் அடிக்கடிதகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று, மீண்டும் சமையல் குறித்து தகராறு எழுந்தது. இந்த தகராறில், நாகராஜை ஒரு பம்ப் ஹவுசிற்குஅவர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு 3 பேரும் சேர்ந்து நாகராஜனைக் கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஈரோடு நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.
ஈரோடு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், தர்மராஜ், பாஸ்கரன், செல்லதுரை ஆகியோருக்குஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications