For Daily Alerts
Just In
சேலம் பஸ் விபத்து: ஜெ. இரங்கல்
சென்னை:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பஸ் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சங்ககிரி அருகே புதன்கிழமை இரவு நடந்த கோர விபத்தில், 40 பேர் வரை கருகி இறந்தனர். இதுகுறித்துஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக நிதியுதவி,மருத்துவ உதவிக்கு மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
Comments
Story first published: Thursday, April 5, 2001, 5:30 [IST]