For Daily Alerts
Just In
சேலம் அருகே விபத்து: கருணாநிதி நஷ்டஈடு அறிவிப்பு
சென்னை:
சேலம் அருகே சங்ககிரி பகுதியில் பஸ், லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் தன்னைமிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கும் நஷ்டஈடுவழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின்குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்கப்படும் என்றார்.
இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நஷ்ட ஈடுவழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியும் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Story first published: Thursday, April 5, 2001, 5:30 [IST]