திமுக, மதிமுக பிரச்சனையில் தலையிட மாட்டேன்: பெர்னான்டஸ் அறிவிப்பு
சென்னை:
தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகளிடையே சமரசத்தை ஏற்படுத்துவது என் வேலையல்ல என தே.ஜ.கூட்டணி நிறுவனரும்,முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்னைக்கு வியாழக்கிழமை காலை வந்தார். அவர் நேராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர்வைகோ வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து அவர்கள் இருவரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுபேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தை குறித்து எந்த விவரமும் தெரிய வரவில்லை.
பெங்களூரில் நடைபெற இருக்கும் தே.ஜ. கூட்டணியின் பேரணியில் பங்கு கொள்வதற்காக வைகோவுடன்பெங்களூருக்கு செல்லும் முன் செய்தியாளர்களிடம் பெர்னான்டஸ் கூறியதாவது:
தி.மு.க- ம.தி.மு.கவிடையே சமரசம் செய்வது என் வேலையல்ல அந்த எண்ணத்துடனும் நான் இங்கு வரவில்லை.ம.தி.மு.க. மத்தியில் உள்ள தே.ஜ.கூட்டணியில் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து பிரதமர் முடிவுசெய்வார்.
நான் வியாழக்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதியை பார்க்க வில்லை. தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் என் நெடுங்கால நண்பர்.
அந்த முறையில்தான் அவர் என்னை பார்க்க வந்தார். கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போது,ராஜ்குமாரை விடுவிக்க உதவுமாறு நான் நெடுமாறனை கேட்டுக் கொண்டேன். அப்போது என் கோரிக்க்ைகுஇணங்கி அவரும் சிறப்பாக செயல்பட்டார் என்றார்.
யு.என்.ஐ.