இன்று பெங்களூர் வருகிறார் வாஜ்பாய்
பெங்களூர்:
பிரதமர் வாஜ்பாய் வியாழக்கிழமை பெங்களூர் வருகிறார்.
பெங்களூர் வரும் அவர் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
தெஹல்கா டாட் காம் இணையதளம் வெளியிட்ட ஆயுதப் பேர ஊழலைக் காரணம் காட்டி நாடு முழுவதும்காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில்பாஜகவும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் பெங்களூரில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம்நடைபெறுகிறது.பெங்களூர் பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்தில் மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம்நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக டெல்லியில் இருந்து ராணுவ தனிவிமானத்தில் பிற்பகல் 3.10 மணிக்கு பெங்களூர் வருகிறார். மத்திய பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் உள்பட பலர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.