For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக, மதிமுக பிரச்சனையில் பாஜக தலையிடாது: வெங்கைய்யா நாயுடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தி.மு.க., ம.தி.மு.க இரண்டுக்கும் இடையே பிளவு ஏற்பட்டிருப்பதும், அவர்கள் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில்இணைந்து போட்டியிட இயலாத சூழ்நிலை உருவாகியிருப்பதும் வருந்தத்தக்கது என மூத்த பா.ஜ.க. தவைவரும்,மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சருமான வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் வெங்கையா நாயுடு கூறியதாவது:

தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை தி.மு.க. தான் தே.ஜ. கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ளது. எனவேதி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதியும், ம.தி.மு.க. தலைவர் வைகோவும் தான் அவர்களுக்குஇடையே உள்ள பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடாது. நாடாளுமன்றத்தேர்தல் என்றால்தே.ஜ. கூட்டணிக்கு பா.ஜ.க. தலைமை ஏற்கும். அப்போது இது போன்ற பிரச்சனை ஏற்பட்டால் பா.ஜ.க. சமரசமுயற்சியில் ஈடுபடும்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் தி.மு.க, - ம.தி.மு.க.வுக்கு இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறாரா என்பதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மட்டுமேபா.ஜ.க.பிரசாரம் செய்யும்.

கருத்துக் கணிப்புகள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறுகின்றன. முன்னர்இது போல் வந்த கருத்துக் கணிப்புகள் தவறாகி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X