For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக-மதிமுக மீண்டும் சேர வாஜ்பாய் முயற்சி: கருணாநிதிக்குத் தெரியாது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதிமுகவை மீண்டும் திமுக கூட்டணிக்குள் கொண்டு வர பிரதமர் வாஜ்பாய் முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுவதுகுறித்து எனக்கு ஏதும் தெரியாது என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், மதிமுகவுடன் மீண்டும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.வைகோவை மீண்டும் திமுக கூட்டணிக்குக் கொண்டு வருவது குறித்து வாஜ்பாய் என்னிடம் ஏதும் பேசவில்லை. அப்படியேமதிமுக-திமுக உடன்பாடு ஏற்பட்டாலும் எந்தப் பலனும் ஏற்படாது.

அதே போல முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ்பெர்ணான்டசை வைகோ சந்தித்துப் பேசியது குறித்தும் பத்திரிக்கைகள் தான் ஏதேதோ எழுதுகின்றன. வைகோவுக்காகபெர்ணான்டஸ் என்னிடம் ஏதும் பேசவில்லை.

வைகோ உபயோகித்த கடுமையான வார்த்தைகளை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், மதிமுகவுடன் மீண்டும் கூட்டணிஎன்ற நிலையே சாத்தியமில்லை. திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் மதிமுக ஈடுபட்டது. திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகவெறும் சீட் பிரச்சனை மட்டும் காரணமில்லை. அவர்கள் பேசிய கடுமையான வார்த்தைகளைப் பார்த்தால், (கடுமையானவார்த்தைகள் எதையும் தான் உபயோகிக்கவில்லை என வைகோ தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது). வேறு ஏதோகாரணத்தினாலும் விலகிவிட முடிவு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

கம்பம், சங்கரன்கோயில், திருமங்கலம் ஆகிய 3 சீட்களை மதிமுக கேட்டது. அதை நாங்கள் தரவில்லை என்பதால் பிரச்சனையைமதிமுக பெரிதாக்கியது.

அதிமுகவில் பாருங்கள். கடந்த முறை த.மா.கா. வென்ற 21 இடங்களை அதிமுக எடுத்துக் கொண்டுள்ளது. அதை பொறுத்துக்கொண்டுள்ள த.மா.காவின் அரசியல் கலாச்சாரத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

எங்கள் கூட்டணியில் கம்பம் தொகுதியை பா.ஜ.க கேட்டது. அதனால் தான் அதைத் தர முடியாது என வைகோவிடம்சொன்னேன். சங்கரன்கோயில் தொகுதியை புதிய தமிழகம் கட்சிக்குத் தந்துவிட்டதால் அதையும் தர இயலாது என்றேன்.

(தான் பிறந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமம், சங்கரன்கோயில் தொகுதியில் வருவதால் அதைத் தருமாறு வைகோகருணாநிதியிடம் கேட்டார். அங்கு அவர் போட்டியிடவும் முடிவு செய்திருந்தார். ஆனால், அதை புதிய தமிழகத்துக்கு ஒதுக்கியதுதிமுக)

கோவில்பட்டி தொகுதியைத் தரத் தயார் என்றேன். அவரது சொந்த ஊர் இந்தத் தொகுதியின் கீழும் வருகிறது. அதே போலதிருமங்கலம் தொகுதியைக் கேட்டார்கள். அதற்குப் பதிலாக தஞ்சாவூர் தொகுதியைக் கேட்டிருக்கலாம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X