திருப்பூர் நீதிமன்றத்துக்கு 5 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
திருப்பூர்:
திருப்பூர் நீதிமன்றத்திற்கு 5 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனால், நீதிமன்றத்திற்கு வருவோர் அனைவரையும் போலீசார் சோதனையிட்டு அனுப்பி வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் பாட்ஷாவுக்கு சிறைத் தண்டனை அளித்துநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பின்போது திருப்பூர் நீதிமன்றத்திற்கு பாட்ஷாவை விடுவிக்க வேண்டும். இல்லையென்றால், மனிதவெடிகுண்டு வெடிக்கும், அல் உம்மா இயக்கம் என மிரட்டல் கடிதம் வந்தது.
இந்த கடிதத்திற்கு பின்னர் நீதிமன்றத்தில் சோதனையிட்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. இதன் பின்னர்மீண்டும் 3 முறை மார்ச் மாதத்தில் மிரட்டல் கடிதம் வந்தது. தற்போது 5வது முறையாக இதே போன்ற கடிதம்வந்துள்ளது.
போலீசார் இந்த கடிதங்களையடுத்து இப்போது நீதிமன்ற பணிகள் பாதிக்காத வகையில், நீதிமன்றத்திற்குள்நுழைவோரை தீவிர சோதனைகளுக்குப் பின்னரே அனுப்பி வருகின்றனர்.
மேலும், இதே வளாகத்தில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவோரும் தீவிரமாக சோதனைசெய்யப்படுகின்றனர். கடிதத்தின் பின்னணி யார் என்பது பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.