For Daily Alerts
Just In
சென்னையில் திடீர் மழை
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென பலத்த மழை பெய்தது.
கடும் வெயிலில் தவித்து வருகிறது சென்னை. இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் கொடுமை இருப்பதாகசென்னைவாசிகள் முனுமுனுத்து வருகின்றனர். குடி தண்ணீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.
இந்த நிலையில் சென்னை மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் விதமாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு மேல் 2மணியளவில் பலத்த மழை பெய்தது. சென்னை நகர் முழுவதும் பெய்த இந்த கோடை மழை சுமார் 1 மணிநேரம் நீடித்தது.
திடீர் மழையால் சென்னை நகரம் சந்தோஷமடைந்துள்ளது. வழக்கமாக கோடை காலத்தின்போது மழை பெய்வதுசாதாரண விஷயம்தான்.ஆனால் இப்போது வெயிலின் கொடுமையும், தண்ணீர்ப் பிரச்சினையும் இதுவரை இல்லாதஅளவுக்கு கொடூரமாக இருப்பதால், இந்த மழை சென்னை மக்களுக்கு அதீத சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
Comments
Story first published: Wednesday, April 11, 2001, 5:30 [IST]