ஜெ. தேர்தலில் போட்டியிட முடியாது: நீதிமன்றம் விளக்கம்
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சென்னைஉயர்நீதிமன்றம் வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் தான் குற்றவாளி இல்லை என்றும், தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்யும்படியும் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடிசெய்தது.
தற்போது ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்று நீதிமன்றம் கூறியிருப்பதால் அவர் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிகிறது.
முன்னதாக, ஜெயா பப்ளிகேஷன்ஸ் வழக்கில் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சசி என்டர்பிரைசஸ் வழக்கில்2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் பெற்றவர் ஜெயலலிதா. இந்தத் தண்டனையை ரத்து செய்யும்படி ஜெயலலிதாசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு விட்டு மனுவை தள்ளுபடிசெய்தார். பின்னர் தனது தீர்ப்பில் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா இல்லையா என்பதை தேர்தல்ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிடுவதில் தடை ஏதும் இருக்காதுஎன தான் கருதுவதாகவும் கூறினார்.