சென்னை - தூத்துக்குடி ரயில் எஞ்சின் சேதம்
மதுரை:
சென்னை - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்: 6703) எஞ்சின் சேதமடைந்தது.
சென்னை எக்மோரிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்.
இந்த ரயில் அம்பாதுரைக்கும், கொடைக்கானல் ரோடுக்கும் இடையே உள்ள பாதையில் வந்த போது ரயில்பாதையில் 300 கிலோ எடையுள்ள பாறை திடீரென விழுந்ததால் ரயில் எஞ்சின் சேதமடைந்தது. இந்த விபத்துவியாழக்கிழமை அதிகாலை நடந்தது.
இந்த பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் பாறை ரயில் பாதையில் விழுந்தது.
ஆனாலும் அதிர்ஷ்டவசமாக ரயிலின் டிரைவர், உதவியாளர், பயணிகள் அனைவரும் எந்த விதமான காயமும்இல்லாமல் தப்பித்தனர் .
கூடுதல் டிவிஷனல் ரயில்வே மேலாளர் ராஜசேகர், மூத்த அதிகாரிகளுடன் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துசென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.
இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. காலை 6 மணியளவில்ரயில் போக்குவரத்து சீரடைந்தது என மதுரை ரயில்வே டிவிஷனல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications