கேரளாவில் எல்.டி.எப். கூட்டணியை ஆதரிக்கிறது அ.தி.மு.க.
திருவனந்தபுரம்:
வரவிருக்கும் கேரள சட்டசபை தேர்தலில் கேரள அ.தி.மு.க. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயககூட்டணியை (எல்.டி.எப்) ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளது.
இது குறித்து கேரள மாநில அ.தி.மு.க. தலைவர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மார்க்சிஸ்ட்தலைமையிலான அணியை ஆதரிப்பதாக கேரள மாநில சிபிஐ (எம்) செயலாளர் பினார்யி விஜயனுக்கு, அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவில் தமிழக மக்கள் அதிகம் வாழும் 7 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட விரும்புவதையும், அவைஎந்தெந்த தொகுதிகள் என்பதையும் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எல்.டி.எப். தொகுதி பங்கீட்டை முடித்து விட்டாலும் அ.தி.மு.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என நம்புகிறோம்.எங்களுக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படாவிட்டாலும் கூட நாங்கள் தொடர்ந்து எல்.டி.எப்பை ஆதரிப்போம்என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications