For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 புலிகளை விடுவிக்கிறது இலங்கை அரசு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி 4 நாட்கள் சண்டை நிறுத்தம்செய்வதால், விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரைவிடுவிப்போம் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் புத்தாண்டையொட்டி 12 ம் தேதி இரவு முதல் 17 ம் தேதி வரை நான்கு நாட்கள் சண்டை நிறுத்தம்செய்யவுள்ளது இலங்கை அரசு. இதனால் புலிகளுக்கு எதிரான தாக்குதலை, சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படும்இந்த நாட்களில் நடத்தக் கூடாது என்று அனைத்து ராணுவ வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து விடுமுறை தினங்கள் இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள். இந்த நேரத்தில்சண்டை நடந்து கொண்டிருந்தால் பலருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளது.

முன்னதாக, டிசம்பர் 24 ம் தேதி முதல் விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்தார்கள். இந்த சண்டை நிறுத்தம்நான்கு முறை நீட்டிக்கப்பட்டு விட்டது. தற்போது ஏப்ரல் 24 ம் தேதி வரை சண்டை நிறுத்தம் அமலில் இருக்கும்என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X