தஞ்சாவூரில் திமுகவினர் மீது குண்டு வீசி தாக்குதல்
சென்னை:
தஞ்சாவூரில் 15 பேர் கும்பல், ஒன்று தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு பேரை குண்டு வீசித் தாக்கிவிட்டு தப்பிவிட்டது.
தஞ்சாவூரில் 15 பேர் கும்பல் ஒன்று சக்திவேல் (வயது 34), ரமேஷ் (வயது 20) ஆகிய இரண்டு பேரையும் ஓட ஓடதுரத்திச் சென்று தாக்கியது.
அவர்கள் இருவரும் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வீட்டில் தஞ்சம் புகுந்த போது அவர்கள்மீது குண்டு வீசிவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
காயமடைந்த இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அங்க இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைதொடர்ந்து அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது
சக்திவேல் மீதும், ரமேஷ் மீதும் தாக்குதல் நடத்திய கும்பல் சென்ற ஆண்டு கொல்லப்பட்ட தி.மு.கவின் கவுன்சில்உறுப்பினரான ஜோதிகுமாரின் ஆதரவாளர்களாக இருக்கக் கூடும் என போலீசார் சந்தேகிக்கினறனர்.
ஜோதிகுமார் கொலை செய்யப்பட்டதில் சக்திவேலுக்கு தொடர்பிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம்கொண்டுள்ளனர்.
ஜோதிகுமார் கொலை செய்ப்பட்டதை தொடர்ந்து சக்திவேல் மீதும், வேறு பலர் மீதும் பல பிரிவுகளிலும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications