234 தொகுதிகளில் போட்டியிடுகிறது ம.ஜ.மு.
கோவை:
தமிழகத்தில் 47 சிறு கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மக்கள் ஜனநாயக முன்னணி 234 தொகுதிகளில்போட்டியிடும் என்று மக்கள் ஜனநாயக முன்னணியில் உள்ள புரட்சித் தலைவர் அதிமுக கட்சித் தலைவர் ராஜாமுகமது தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
முன்னாள் பிரதமர் தேவ கவுடா ஏப்ரல் 18 ம் தேதி மக்கள் ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையைவெளியிடுவார். மேலும் வேட்பாளர் பட்டியலையும் அதே நாள் அவர் அறிவிப்பார்.
தேர்தல் அறிக்கையில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு இடம் பெற்றிருக்கும்.
எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்திருக்கிறோம்.
தமிழகத்தில் 58 சதவீத மக்கள் திமுக மற்றும் அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை. அதனால்அவர்களின் வாக்குகள் மக்கள் ஜனநாயக முன்னணிக்குக் கிடைக்கும் என்றார் ராஜா முகமது.
யு.என்.ஐ.