அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்கலாம்: சாரங்கி

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், வேறுஏதாவது அடையாளங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி மிருதுஞ்சய் சாரங்கிதெரிவித்தார்.

இதுகுறித்து கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் 10 ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த முறை அனைத்துவாக்குச்சாவடியிலும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்கு மக்களிடம்நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறோம்.

தமிழகத்தில் இதுவரை புகைப்பட அடையாள அட்டை கிடைக்காதவர்கள் தங்களிடம் உள்ள வேறுஅடையாளங்களைக் காட்டி வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு அமைதியாக நடப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் உதவிசெய்ய வேண்டும்.

தேர்தல் விதிமுறைகளை மீறி நடக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும்தேர்தல் அதிகாரிகள், மாவட்டக் கலெக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலையொட்டி வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடக்காதவண்ணம் பாதுகாக்கும் வகையில் மாநில போலீசார்தவிர 94 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களில் 101 கம்பெனி மத்தியபுறக்காவல் படை போலீஸார், ஓய்வு பெற்ற போலீஸார், ஹோம் கார்டு போலீஸார் ஆகியோர் ஈடுபடுத்தப்படுவர்.

ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்யவேண்டும். இது குறித்து நாங்கள் எதுவும் கருத்துக் கூறக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்றார்.

முன்னதாக, நிலகிரி, ஈரோடு, நாமக்கல், கோவை, சேலம், கரூர், மற்றும் திண்டுக்கல் மாவட்டக் கலெக்டர்களுடன்தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+