தென் ஆப்பிரிக்காவில் மைதானத்தில் நெரிசலில் சிக்கி 47 பேர் பலி
ஜோகன்னஸ்பெர்க்:
தென் ஆப்பிரிக்காவில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் அளவுக்கதிகமாக கூட்டம் இருந்ததால் கூட்டநெரிசலில் சிக்கி 47 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்களும் அடங்குவர்.
ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள எலிஸ் பார்க் ஸ்டேடியத்தில் புதன்கிழமை இரவு கால்பந்தாட்டம் நடந்தது.கால்பந்தாட்டத்தைக் காண வந்திருந்த விளையாட்டு ரசிகர்கள் மைதானம் முழுவதும் கூடியிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 47 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். நெருசலில் சிக்கிஉயிரிழந்தோரின் சடலங்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த எலியஸ் பார்க் ஸ்டேடியத்தில் 60,000 இருக்கைகள் உள்ளன. இருக்கைகளில் அமர்ந்துபார்ப்பவர்களைத் தவிர ஸ்டேடியத்தின் வெளியில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.
கைசர் செப் மற்றும் ஓர்லான்டே பைரேட்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கிடையே கால்பந்தாட்டம் நடந்துகொண்டிருந்தது. அதைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விளையாட்டு நடந்து கொண்டிருந்தஸ்டேடியத்துக்குள் நுழைய முயன்றனர்.
கூட்டத்தைக் கலைத்து விடுவதற்காக போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசினார்கள். இதையடுத்துகூட்டநெரிசலில் சிக்கி 47 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து ரெப்ரீ ஆட்டம் தொடங்கிய30 நிமிடங்களில் ஆட்டத்தை நிறுத்தினார்.
நெரிசலில் சிக்கி காலில் காயம் ஏற்பட்ட ஹரியத் ட்லாமினி கூறுகையில், நான் எனது இருக்கையில் அமர்ந்துகால்பந்தாட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பெருங்கூட்டம் ஒன்று நாங்கள் அமர்ந்திருந்தஇருக்கையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது நெரிசலில் சிக்கி எனது காலில் காயம் ஏற்பட்டதுஎன்றார்.
இச்சம்பவத்தில் மொத்தம் 130 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 5 பேர் மிகவும் ஆபத்தானநிலையில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் நகோன்டி பால்போர் கூறுகையில், நெரிசலில் சிக்கிஉயிரிழந்தவர்களுக்காக மெளன அஞ்சலி செலுத்துமாறு கூறினார். தென் ஆப்பிரிக்க அதிபர் தாபோ மபேஹிகூறுகையில் இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைை நடத்த உத்தரவிட்டார். இது போன்ற சம்பவம்எதிர்காலத்தில் நடக்கக் கூடாது என்றும் கூறினார்.
யு.என்.ஐ.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications