For Daily Alerts
Just In
சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த 365 கடல் ஆமைகள் பறிமுதல்
சென்னை:
சிங்கப்பூருக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 365 நட்சத்திர கடல் ஆமைகளை சுங்கஇலாகா அதிகாரிகள்கண்டுபிடித்து பறிமுதல் செய்து வனவிலங்கு அதிகாரி உலகநாதனிம் ஒப்படைத்தனர்.
திருச்சியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் 365 நட்சத்திர கடல் ஆமைகளை 7 துணிப்பைகளில் வைத்துசிங்கப்பூருக்கு கடத்த முயன்றார்.
அவரது பையை ஸ்கேன் செய்த சென்னை விமான நிலைய அதிகாரிகள் அந்த பையில் பொருட்கள் அசைவதுபோல் தெரிவதை கண்டனர். அவரது பையை சோதனையிட்டுப் பார்த்த போது அதில் நட்சத்திர கடல் ஆமைள்இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இவை பறிமுதல் செய்யபட்டு வனவிலங்கு அதிகாரி உலகநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நட்சத்திர கடல் அமைகள் கிண்டியில் இருக்கும் குழந்தைகள் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனஉலகநாதன் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
Story first published: Thursday, April 12, 2001, 5:30 [IST]