கோவையில் நாளை மதிமுக மாநாடு
கோவை:
கோவையில் சனிக்கிழமை மதிமுக மாநாடு நடக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தனித்து போட்டியிடுவது உள்பட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதுவரை இந்தக் கூட்டத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, திமுககூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுகிறது.
பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிடும் 21 தொகுதிகளை விட்டுக் கொடுத்து 213 தொகுதிகளிலும் போட்டியிடும்மதிமுகவின் தேர்தல் அரசியல் மாநாடு கோவையில் சனிக்கிழமை நடக்கிறது.
இந்த மாநாடு முழுக்க முழுக்க மதிமுகவின் மாநாடாக மட்டுமே பிரதிபலிக்கப் போகிறது. கூட்டணிக் கட்சித்தலைவர்கள் யாரையும் அழைக்காமல், இந்த மாநாட்டை மதிமுக நடத்துகிறது.
இந்த மாநாட்டில், மதிமுகவின் தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் உள்பட முக்கிய தீர்மானங்கள்நிறைவேற்றப்படவுள்ளன. தேர்தல் சமயத்தில் நடக்கும் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.
தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து தொண்டர்களும் கலந்து கொள்ளும் வகையில் மாநாடு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அதிக ஆடம்பரம் இல்லாத மாநாடாக இது நடக்கும் என கட்சியின் நிர்வாகிகள்தெரிவித்துள்ளனர்.