வேட்பாளர் வேட்டையில் சுவாமி தீவிரம்
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடப் போவதாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி அறிவித்திருந்தார்.ஆனால் போட்டியிட ஆள் இல்லாமல் ஆள் தேடிக் கொண்டிருக்கிறார் அவர்.
அடுத்த மாதம் 10ம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடும் எனஅக்கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியிருந்தார்.
இது மட்டுமல்லாமல் பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம், கேரள மாநிலங்களிலும் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம் என கூறிவந்தார்.
இது எல்லாம் சரி. போட்டியிட ஆள் இருக்கிறார்களா? அவர்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார் சுவாமி. தேர்தலில் போட்டியிட சீட்தருகிறோம். போட்டியிட வாருங்கள் என கூப்பிட்டு வருகிறார் சுவாமி.
கஷ்டப்பட்டு 20 தொகுதிகளுக்கு வேட்பாளரை பிடித்துப் போட்டு விட்டார் சுவாமி. மீதி தொகுதிகளுக்கு ஆட்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்.
அவருடன் இருக்கும் பலரும் கூட அவரிடமிருந்து தப்பிப்பதற்காக வழி தேடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications