ஐ.டி.பூங்கா அமைக்க இந்தியாவின் உதவியை நாடும் சவுதி
துபாய்:
சவுதி அரேபியாவில் சாப்ட்வேர் பூங்கா அமைக்க இந்தியாவின் உதவி வேண்டும் என்று சவுதி அரேபியா கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியா உயர் அதிகாரிகள் கூறுகையில், இந்திய தொழில் வர்த்தகத் துறை உயர்மட்டக்குழுவினர் சவுதி வந்திருந்தனர். அப்போது அவர்கள் இளவரசர் அப்துல்லா பின் பைசலை சந்தித்துப் பேசினர்.
இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள், சவுதியில் செயல்படுவது குறித்து அப்துல்லா மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும்சவுதி அரோபியாவில் சாப்ட்வேர் பூங்கா அமைப்பதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றும் அப்துல்லாஇந்திய உயர்மட்டக் குழுவினரிடம் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, சவுதி அரேபியாவுக்கு 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று சென்றது. டாடா ஸ்டீல் லிமிடெட்பொது மேலாளர் ஈரானி மற்றும் இரும்பு எஃகு, ரசாயனம், மின்சாரம், எண்ணெய் வளம், தகவல் தொழில்நுட்பம்,பிளாஸ்டிக், தொலைத்தொடர்புத்துறை, ஆட்டோமொபைல், டீசல் என்ஜின் உள்பட பலதுறையைச் சேர்ந்தபிரதிநிதிகள் சவுதி அரேபியா சென்றனர்.
பல நூற்றாண்டுகளாக இந்தியாவும், சவுதி அரேபியாவும் வர்த்தகத் துறையில் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்தியாவிலிருந்து சவுதி அரேபியா சென்றுள்ள உயர்மட்டக் குழுவினர் ஏப்ரல் 13 ம் தேதி ரியாத்சென்றனர். அங்கு இளவரசர் அப்துல்லாவை சந்தித்த அவர்கள் ஏப்ரல் 16 ம் தேதி டம்மாம் செல்கின்றனர்.அங்கிருந்து 18 ம் தேதி ஜெட்டா நகர் செல்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications