சீட் கேட்டவருக்கு கருணாநிதி கொடுத்த சீட்
சென்னை:
அ.தி.மு.க.வை ஆதரிப்போம். தி.மு.க.வை எதிர்ப்போம் என கூறிய மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு சீட் கொடுத்தார்கருணாநிதி.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், தி.மு.க. எங்களுக்கு விரோதி. அ.தி.மு.வுடன்தான் உறவு. அவர்கள்சீட் கொடுத்தால் போட்டியிடுவோம். இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருப்போம் என கூறியிருந்தார்.
ஜெயலலிதா அவருக்கு தொகுதி எதுவும் ஒதுக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு தி.மு.க.தலைமையிடமிருந்து தேர்தலில் சீட்கொடுப்பதாக அழைப்பு வந்தது.
பறந்து சென்றார் சேதுராமன். உங்களுக்கு திருமங்கலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என கூறினார்கருணாநிதி.
இன்னும் ஒரு சீட் அதிகம் கொடுத்தால் தொண்டர்கள் சந்தோஷப்படுவார்கள் என சேதுராமன் கூறினார். கருணாநிதியும்கொடுக்கலாம் என கூறி துண்டு சீட்டு ஒன்றை சேதுராமனிடம் கொடுத்தார்.
ஆர்வத்துடன் அதை சேதுராமன் பிரித்து பார்த்த போது டாக்டர் சேதுராமன் வாழ்க! உஙகள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள் எனகருணாநிதி எழுதியிருந்தார்.
பேசாமல் கொடுத்த ஒரு சீட்டுக்கு ஒப்புக்கொண்டு வந்து விட்டார் சேதுராமன்.