கைதிகளுக்கும், வார்டன்களுக்கும் மோதல்: கோவை சிறையில் பதட்டம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை குண்டுவெடிப்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கும்சிறைவார்டன்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் கோவை சிறையில் பதட்டம் ஏற்பட்டது. போலீசார்குவிக்கப்பட்டனர்.

கோவை சிறையில் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக 200 அல் உம்மா சிறைக் கைதிகள் உள்ளனர். கோவைசிறையில் குண்டுவெடிப்பு கைதி அக்பர் அலியும் இருக்கிறார். இவர் கடந்த சில நாட்களாக மூட்டு வலி எனக் கூறிசிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால் போதிய போலீசார் இல்லாததால் அவரை அழைத்துச் செல்ல இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அக்பர் அலி கடந்த 3 நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இதற்கு சிலர் அல்உம்மாகைதிகள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், அக்பர் அலிக்கு ஆதரவாக வார்டன்களிடம் வாதாடியுள்ளனர். இது மோதலை ஏற்படுத்தும் அளவிற்குவாக்குவாதமாக முற்றியது.

இதையடுத்து கைகலப்பு ஏற்படும் முன்பே அதிகாரிகள் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்தார். இருந்தபோதிலும்,சிறையில் பதட்டம் ஏற்பட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+